19.14 பில்லியன் டாலராக இருந்தது

2018-19 ஆம் ஆண்டில் இந்திய அரசின் வணிகத் துறையால் அங்கீகரிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்ட, இந்தியாவின் மருந்து ஏற்றுமதி 19.14 பில்லியன் டாலராக இருந்தது என்று இந்திய வர்த்தக ஊக்குவிப்பு கவுன்சில் (டி.பி.சி.ஐ) வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.


இந்த மருந்துகளைத் தயாரிக்க ஏ.பி.ஐ (மூலப்பொருள்) சுமார் 85% சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் ஏ.பி.ஐ உற்பத்தி மிகக் குறைவு என்பதோடு, இந்தியாவில் தயாரிக்கப்படும் ஏ.பி.ஐ மூலப்பொருளை இறுதியான மருந்தாக தயாரிப்பதற்காக சில பொருட்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. அதாவது, இந்திய நிறுவனங்களும் மருந்துத் துறையில் சீனாவை நம்பியுள்ளன.