கொரோனா வைரஸ் காரணமாக சீனாவிலிருந்து ஏபிஐ இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது

கொரோனா வைரஸ் காரணமாக சீனாவிலிருந்து ஏபிஐ இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. சீனாவிலிருந்து பொருட்கள் நிறுத்தப்படுவதால், இந்தியாவில் மருந்துகளை தயாரிக்கும் நிறுவனங்கள் இப்போது ஏ.பி.ஐகளை அதிக விலைக்கு வாங்க வேண்டியிருக்கிறது.


மும்பையை சேர்ந்த ஆர்த்தி ஃபார்மா நிறுவனம் ஏ.பி.ஐ.களை இறக்குமதி செய்து மருந்து நிறுவனங்களுக்கு விற்பனை செய்கிறது. சீனாவில் இருந்து தற்போது மூலப்பொருள் இறக்குமதி முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று நிறுவனத்தின் உரிமையாளர் ஹேமல் லத்தியா கூறினார். சரக்குகள் வரத்து நிறுத்தப்பட்டுள்ளது, அவை எப்போது வரும் என்பது பற்றிய எந்த தகவலும் இல்லை என்று அவர் கூறுகிறார்.


பிபிசி-யிடம் பேசிய அவர், "இந்தியாவில் தயாரிக்கப்படும் ஏ.பி.ஐ.களும் சீனாவைச் சார்ந்தே இருக்கின்றன. எனவே, இங்கு ஏ.பி.ஐ தயாரிப்பதும் பாதிப்படைந்துள்ளது. அதோடு, சீனாவிலிருந்து நாங்கள் இறக்குமதி செய்யும் ஏ.பி.ஐ.களும் குறைந்துவிட்டன.''


ஏப்ரல் மாதத்திற்குள் இறக்குமதி மீண்டும் தொடங்கலாம் என்று அவர்கள் மதிப்பிடுகின்றனர். ஆனால் இந்த பிரச்சனை ஒன்று முதல் ஒன்றரை மாதங்கள் வரை நீடிக்கும்.


"ஏபிஐ பழைய சரக்குகளின் விலை 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. சீனாவிலிருந்து ஏபிஐகளை இறக்குமதி செய்து உள்ளூர் நிறுவனங்களுக்கு விற்கும் நிறுவனங்கள் சரக்குப் பற்றாக்குறை காரணமாக அதிக விலையில் விற்பனை செய்கின்றன.